Wednesday, October 29, 2008

7வது நாள் இரவு ஷூட்டிங்கில்...

வீட்டிற்குள் ஷூட் எடுத்துக்கொண்டிருந்த இடம்அன்று இரவு படப்பிடிப்பு படபடப்பாக நடந்துக்கொண்டிருந்தது, காட்சிப்படி ஹீரோ, அந்த வீட்டை சுற்றி சில Electro Magnetic Field அளவுகள் எடுக்க வேண்டும். அதற்காக சிலர் வீட்டிற்குள்ளேயும் பலர் வீட்டிற்கு வெளியேயும் ஃபீல்டில் இல்லாதவாறு நின்றுகொண்டிருந்தோம். ஷாட் முடிந்ததும் சதீஷ்(கேமராமேன்) வாக்கிடாக்கியில் சிக்னல் கொடுப்பார்

நானும்(ஹரீஷ் நாராயண்) கிருஷ்ண சேகர் சாரும் வெளியே வாக்கி டாக்கியுடன் வெயிட் செய்து கொண்டிருந்தோம். ஆனால் வெகு நேரம் ஆகியும் எந்த ஓரு மெஸேஜும் வராததால், நாங்கள் உள்ளே சென்று என்ன என்று பார்த்தால், அனைவரும் ஒருவரையொருவர் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம், அந்த வீட்டில் மாடியிலிருந்து ஏதோ ஒரு விநோத சத்தம் கேட்டது என்று சதீஷ் கூறினார். வீட்டிற்குள்ளிருந்த ஹரி(இன்னொரு டைரக்டர்), ஸ்ரீஜித் (அஸோஸியேட்), லோகேஷ்(அஸிஸ்டெண்ட்) அனைவரும் அவர்களுக்கும் அந்த சத்தம் கேட்டதாக ஒப்புக்கொண்டணர்.

வீட்டிற்குள்இவர்கள் முகத்திலிருந்த மிரட்சியைப் பார்த்த எங்களுக்குள்ளும் ஒருவித பய உணர்வு ஊடுருவியது. மணி 12:30, வெகு நேரம் வரை செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தோம். முதல் வேலையாக வீட்டை விட்டு வெளியே வந்தோம். எங்களில் யார் யாருக்கு பேய் பயம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அந்த தருணம் மட்டும் எங்கள் அனைவருக்கும் பயம் இருந்தது உண்மைதான், யாரும்(எங்கள் குழுவில்) 'நான் பயப்படவில்லை' என்று மறுக்க முடியாது.

அப்போதைக்கு எங்களுக்கு தெரிந்த ஒரே யோசனை, அங்கு வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த TAVERA வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டோம். அன்றைக்கு ஷூட்டிங் Cancel செய்துவிட்டு, நடந்தவற்றை மறப்பதற்காக சில ஜோக்ஸ் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு சிரித்து(?) கொண்டோம். அந்த நேரத்திற்கு அந்த Laughter Therapy நன்றாக வேலை செய்தது. ஆனாலும் வண்டிக்குள்ளிருந்து ஒருவருக்கொருவர் தெரியாமல் அந்த வீட்டை ஓரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது.

Friday, October 24, 2008

இரவில் மட்டும் ஷூட்டிங்...

இருட்டிலேயே பூஜை
இந்த படத்திலேயே கொடுமையான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான காட்சிகள் இரவில் அமைந்ததுதான். அது கூட பரவாயில்லை, அந்த காட்சிகளும் எந்த நேரத்தில் நடைபெறுகிறதோ, அதே நேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம் (இது டிஸ்கஷினிலேயே நாங்கள் எங்களுக்குள் செய்துகொண்ட உறுதிமொழி).

இது இப்படியிருக்க முதல் நாள் நாங்கள் லொகேஷனில் கால் வைத்த போது அங்கு கும்மிருட்டு, அப்போதுதான் தெரிந்தது, அந்த வீட்டில் கரண்ட் கனேக்ஷன் என்ற ஒன்று அறுந்துபோய் 2 வருடங்களானதாம். இருட்டிலேயே பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பித்தோம்.

'சரி நாளைக்கு ஜெனரேட்டர் ரெடி பண்ணிட்டு ஷூட்டிங் வச்சிக்கலாமா?' என்று புரொட்யூசரிடம் சொன்னால், அவரோ இன்று இரவு ஷூட்டிங் ஆரம்பித்தே தீர வேண்டும் என்று கூறிவிட்டார். எப்படி என்று எங்கள் ஷெட்யூலில் தேடியபோது, தீப்பந்த வெளிச்சத்தில் எடுக்கவேண்டிய ஒரு காட்சி மாட்டியது. சரி எடுத்து விடலாம் என்று தீப்பந்தத்தோடு தயாரானோம்.

தீப்பந்த காட்சிகதைப்படி நள்ளிரவு 12 - 12.30க்குள் நடக்கவேண்டிய காட்சி, நாங்கள் 12 மணிக்கு முதல் நாள்(இரவு) ஷூட்டிங் ஆரம்பித்தோம்.

'எனக்கொன்னும் பயமில்லை...' என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்களே தவிர, எல்லோருக்குள்ளும் ஒரு மிரட்சி இருந்துக்கொண்டுதான் இருந்தது. ஒருவழியாக அந்தக்காட்சியை 2 மணி நேரத்தில் எடுத்து முடித்துவிட்டோம் (நல்ல வேளை சின்ன ஸீன்)...

அடுத்த நாள், அந்த வீட்டிற்குள் நுழைவதர்குள் எல்லா லைட்ஸூம் ரெடியா இருக்கணும் என்று புரொட்யூஸர் கடுமையாக உத்தரவிட்டுவிட்டுத்தான் தூங்கச் சென்றார். 25 கி.மி தொலைவிலிருக்கும் அடிமாலி என்ற இடத்திலிருந்து ஜெனரேட்டரை வரவழைத்தோம். நல்லவேளையாக அடுத்த நாளிலிருந்து அந்த வீட்டில் ஓரளவு வெளிச்சம் இருந்தது, காட்சியின் நேரத்தைக் கணக்கிட்டு விடுவிடுவென ஷூட்டிங்கை முடித்துக்கொண்டிருந்தோம்.

கோபால், என்ற ஒரு சேட்டன், ஜெனரேட்டரையும், மற்ற பொருட்களையும் பார்த்துக்கொள்வார், அவர் 4வது நாள்(இரவு) ஷூட்டிங்கில் எங்களுடன் சண்டைக்கு வந்தார், ஏனென்று கேட்டதற்கு காவலுக்காக என்னைப் பகலில்(?) எல்லோரும் தனியாக விட்டுவிட்டு போகிறீர்கள், எனக்கு பயமாக இருக்கிறது என்றார். அவரை ஒருவழியாக பேசி சமாளித்து, ஜெய்குமார் என்ற கேமரா அஸிஸ்டெண்ட் ஒருவரை, அவருக்கு(சேட்டனுக்கு) துணையாக இருக்கச் சொல்லி பஞ்சாயத்திற்கு தீர்ப்பு வழங்கினோம்.

ஜெய்குமார் - Camera Asst
இப்படிப் பல (மெகா)கதைகள் ஒவ்வொரு இரவும் நடந்து கொண்டிருந்தாலும், ஒரு வழியாக ஷூட்டிங் எந்த பிரச்சினையும் இல்லாமல் 7வது நாள் வரை போய்க்கொண்டிருந்தது, 7வது நாளிரவு மட்டும் ஒரு பிரச்சினை....

Wednesday, October 22, 2008

இதோ அந்த பயங்கர வீடு...

மறுநாளிலிருந்தே லொகேஷன் வேட்டை நடத்த ஆரம்பித்தோம். முதலில் டோனி என்ற ஒருவர் லொகேஷன் மேனேஜராக வந்தார்... அவரிடம் ஆவி, பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என்றதும், மனிதன் குழம்பிப்போய்விட்டார். பாவம் எங்களுக்காக அவரும் அரும்பாடு பட்டு சில பல பழைய இடங்களை காட்டிக் கொண்டிருந்தார்... இப்படியே 2 நாட்கள் கழிந்தன, ஆனால் பயங்கரமான இடங்களாக எதுவும் மாட்டவில்லை... ஒரு கட்டத்தில் அவர் பின்வாங்கிக் கொள்ளவே, நிக்ஸன் என்றவர் தனக்கு தெரிந்த சில இடங்களை காட்டுவதாக கூறி எங்களை அழைத்து சென்றார்... இருந்தும் நாங்கள் பார்த்த சில இடங்களின் சலிப்புகள் காரணமாக பெரிதாய் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அவருடன் சென்றோம்...
போதமேடு என்ற பகுதியில் அவர் காட்டிய முதல் இடமே நாங்கள் கதைக்காக எதிர்ப்பார்த்தது போலவே இருந்தது. ஆனால் நிகஸன், அந்த இடத்தில் உண்மையிலேயே சில அமானுஷ்யங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறினார். ஆஹா! இதுதானே நாங்கள் எதிர்ப்பார்த்து என்று கூறி, அந்த இடத்தை முடிவு செய்தோம். ஆனால் அந்த இடம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்கவில்லை, அதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறவே, நாங்கள் ஒரு 4 நாட்கள் அந்த இடத்தில் ஷூட்டிங் பர்மிஷனுக்காக காத்திருந்தோம்...
இதற்கிடையே நிக்ஸன் அவர்கள் எங்களுக்கு வெவ்வேறு இடத்தை காட்டிக் கொண்டேடடட இருந்தார்... Dayக்கள் நகர்ந்ததுதான் மிச்சம், ம்... ஹூம்...எதுவும் எங்களுக்கு பிடிக்கவில்லை... 'மணந்தால் மஹாதேவி.. இல்லையேல் மரணதேவி' என்ற கதையாய், மிகவும் பிடிவாதமாக இருந்து அந்த இடத்திற்கான ஷூட்டிங் அனுமதியை ஒருவாறு பெற்றுக்கொண்டோம்.
தயாரிப்பாளர் முகத்திலும் எங்கள் அனைவர் முகத்திலும் இப்போதுதான் நிம்மதி.
ஆனால் அதே முகத்தில் சற்றே கலவரமும் கலந்திருந்தது, காரணம் நாங்கள் ஷூட் செய்யவேண்டிய காட்சிகள் அனைத்தும் இரவு நேரங்களில் படம்பிடிக்க படவேண்டியவை. ஆனால் அந்த வீட்டை பாரத்தால் பகலிலேயே பயங்கரமாக இருந்தது. இது போதாதென்று அப்பகுதியில் ஒரு சில மனிதர்களும், 'இங்கேயா படம் எடுக்கிறீங்க' என்று அந்த வீட்டைப் பற்றி பலப்பல கதைகள் கூறி எங்கள் பீதி(தீ)க்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டே இருந்தனர்.
'கிளம்பிட்டோம், வந்துட்டோம், எடுத்துட்டுதான் போனோம்' என்ற உறுதிமொழியை எங்கள் குழுவில் அனைவரும் எடுத்துக் கொண்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு, லொகேஷனில் (அந்த வீட்டில்) கால் பதித்தோம்.

Sunday, October 19, 2008

ஜூலை 2ஆம் தேதி - மூணாறு பயணம்....

'இரா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்காக ஜூலை 2 ஆம் தேதி எங்கள் குழு, மூணாறு கிளம்பியது. வழியில் கரூரில் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் சில பிரத்யேகமான எலக்ட்ரானிக் சாதனங்களை ஆர்டர் செய்திருந்தோம், அதை வாங்கிக்கொண்டு மூணாறு போவதாக ப்ளான். ஆனால் கரூரில் கொஞ்சம் லேட் ஆகிவிட்டதால் (ஆனால் சாதனங்கள் கிடைத்துவிட்டது) நாங்கள் மூணாறு சென்றடைய நள்ளிரவு ஆகிவிட்டது. நல்லவேளையாக நாங்கள் சென்னையிலிருந்தே ரூமை புக் செய்திருந்ததால் சிரமம் எதுவுமில்லாமல் சென்றதும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டோம்