Friday, October 24, 2008

இரவில் மட்டும் ஷூட்டிங்...

இருட்டிலேயே பூஜை
இந்த படத்திலேயே கொடுமையான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான காட்சிகள் இரவில் அமைந்ததுதான். அது கூட பரவாயில்லை, அந்த காட்சிகளும் எந்த நேரத்தில் நடைபெறுகிறதோ, அதே நேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம் (இது டிஸ்கஷினிலேயே நாங்கள் எங்களுக்குள் செய்துகொண்ட உறுதிமொழி).

இது இப்படியிருக்க முதல் நாள் நாங்கள் லொகேஷனில் கால் வைத்த போது அங்கு கும்மிருட்டு, அப்போதுதான் தெரிந்தது, அந்த வீட்டில் கரண்ட் கனேக்ஷன் என்ற ஒன்று அறுந்துபோய் 2 வருடங்களானதாம். இருட்டிலேயே பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பித்தோம்.

'சரி நாளைக்கு ஜெனரேட்டர் ரெடி பண்ணிட்டு ஷூட்டிங் வச்சிக்கலாமா?' என்று புரொட்யூசரிடம் சொன்னால், அவரோ இன்று இரவு ஷூட்டிங் ஆரம்பித்தே தீர வேண்டும் என்று கூறிவிட்டார். எப்படி என்று எங்கள் ஷெட்யூலில் தேடியபோது, தீப்பந்த வெளிச்சத்தில் எடுக்கவேண்டிய ஒரு காட்சி மாட்டியது. சரி எடுத்து விடலாம் என்று தீப்பந்தத்தோடு தயாரானோம்.

தீப்பந்த காட்சிகதைப்படி நள்ளிரவு 12 - 12.30க்குள் நடக்கவேண்டிய காட்சி, நாங்கள் 12 மணிக்கு முதல் நாள்(இரவு) ஷூட்டிங் ஆரம்பித்தோம்.

'எனக்கொன்னும் பயமில்லை...' என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்களே தவிர, எல்லோருக்குள்ளும் ஒரு மிரட்சி இருந்துக்கொண்டுதான் இருந்தது. ஒருவழியாக அந்தக்காட்சியை 2 மணி நேரத்தில் எடுத்து முடித்துவிட்டோம் (நல்ல வேளை சின்ன ஸீன்)...

அடுத்த நாள், அந்த வீட்டிற்குள் நுழைவதர்குள் எல்லா லைட்ஸூம் ரெடியா இருக்கணும் என்று புரொட்யூஸர் கடுமையாக உத்தரவிட்டுவிட்டுத்தான் தூங்கச் சென்றார். 25 கி.மி தொலைவிலிருக்கும் அடிமாலி என்ற இடத்திலிருந்து ஜெனரேட்டரை வரவழைத்தோம். நல்லவேளையாக அடுத்த நாளிலிருந்து அந்த வீட்டில் ஓரளவு வெளிச்சம் இருந்தது, காட்சியின் நேரத்தைக் கணக்கிட்டு விடுவிடுவென ஷூட்டிங்கை முடித்துக்கொண்டிருந்தோம்.

கோபால், என்ற ஒரு சேட்டன், ஜெனரேட்டரையும், மற்ற பொருட்களையும் பார்த்துக்கொள்வார், அவர் 4வது நாள்(இரவு) ஷூட்டிங்கில் எங்களுடன் சண்டைக்கு வந்தார், ஏனென்று கேட்டதற்கு காவலுக்காக என்னைப் பகலில்(?) எல்லோரும் தனியாக விட்டுவிட்டு போகிறீர்கள், எனக்கு பயமாக இருக்கிறது என்றார். அவரை ஒருவழியாக பேசி சமாளித்து, ஜெய்குமார் என்ற கேமரா அஸிஸ்டெண்ட் ஒருவரை, அவருக்கு(சேட்டனுக்கு) துணையாக இருக்கச் சொல்லி பஞ்சாயத்திற்கு தீர்ப்பு வழங்கினோம்.

ஜெய்குமார் - Camera Asst
இப்படிப் பல (மெகா)கதைகள் ஒவ்வொரு இரவும் நடந்து கொண்டிருந்தாலும், ஒரு வழியாக ஷூட்டிங் எந்த பிரச்சினையும் இல்லாமல் 7வது நாள் வரை போய்க்கொண்டிருந்தது, 7வது நாளிரவு மட்டும் ஒரு பிரச்சினை....

No comments: